சித்தர்கள் இராச்சியம்

Image by siththarkal.com

Wednesday, February 2, 2011

காலம் உணர்த்திய நட்பு


நீண்ட நாட்களுக்கு பின் (திருமணத்திற்கு பின்)எனது தோழியைப் பற்றி மீண்டும் எழுதுவதில் மிகவும் சந்தோசப்படுகிறேன். 

ஏன் என்றால் நான் எழுதியது போல் திருமணத்திற்கு பின் நானும் என் தோழியை மறந்து விடுவேனோ என்ற பயம் கூட மனதிற்குள் இருந்தது.

ஆனால் பிரிவு தான் நல்ல உள்ளங்களை இணைக்கும் பாலம் என்று புரிந்து கொண்டேன்.

அன்றிலிருந்து இன்று வரை கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் என் இதயம் முழுதும் நிறைந்துள்ளார் என் தோழி.

எனக்கு அமைந்த கணவர் மிகவும் நல்லவர் எங்கள் நட்பை நன்றாக புரிந்து கொண்டு இன்று வரை எங்கள் நட்புக்கு தடை ஏதும் சொன்னதில்லை. 

இனிவரும் பதிவுகள் முந்தைய பதிவின் முடிவிலிருந்து தொடர்ந்து எழுதுவேன்.திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி.

அடுத்த ஒரு சந்தோசமான செய்தியோடு உங்களை சந்திக்கிறேன் அதுவரை காத்திருக்கவும்.