என் இனிய தோழியின் மீது கொண்டுள்ள அன்பை மிகைப்படுத்தி கூற நான் இந்த பதிவை எழுதவில்லை.ஏன் என்றால் என் அன்பு அவர்களுக்கே நன்றாக தெரியும்.என்பதிவை படிக்கும் நீங்களும் உங்கள் அன்பானவர்களை நினைவுபடுத்திகொள்ள வேண்டும் என்பதே என்நோக்கம்.
நேற்றைய என்பதிவை முதலில் என்தோழி தான் பார்த்தார். பார்த்த உடன் நான் இதற்கு தகுதியானவள் நான் இல்லை என்று சொன்னார்.இந்த அடக்கம்,பணிவு தான் அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது.
நான் google இல் நிறைய பதிவுகளை பார்த்திருக்கிறேன் அறிவு,ஆன்மிகம்,சமையல் என்று உலகில் இல்லாதது என்று எதுவும் கிடையாது.வித்தியாசமாக எழுதவேண்டும் என்ற நோக்கமே எனது பதிவுகள்.தோழியை பற்றி இந்த பதிவில் சிறிய முன்னுரை மட்டும் பதிகிறேன்.
பழகுவதற்கு இனியவர்,அன்பானவர் என்று என் வார்த்தை ஜாலங்களால் வர்ண்ணிக்க தேவை இல்லை.மிகவும் இயல்பானவர்,அன்பு,பாசம்,நேசம் பற்றி புரியவைத்தவர்.உதவி என்று கேட்டால் முகம் சுளிக்காமல் பாரபட்சமின்றி உதவுபவர்.என் மனதை இன்பமாய் ஆண்டு கொண்டிருப்பவர்.
இனிவரும் பதிவுகளில் எனக்கு அவர் அறிமுகம் ஆனது எங்கள் நட்பு தொடர்ந்தது எப்படி என்று எழுதுகிறேன்.பதிவுக்கு நான் மிகவும் புதிது என்பதால் எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும் .
அருமை!
ReplyDeleteமிகவும் நன்றி.
ReplyDelete.இந்த அடக்கம்,பணிவு தான் அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது.// ...........................
ReplyDelete