தோழர்கள் என்னை மன்னிக்க வேண்டும் பதிவுக்கு நான் மிகவும் புதிது என்னதால் உங்களது விமர்சனத்தை அழித்துவிட்டேன்..இனிமேல் இது போல் நிகழாது தொடர்ந்து கமெண்ட் அனுப்புங்கள்.
பொதுவாக பெண்கள் மற்ற பெண்கள் மீது அன்பை விட பொறாமை தான் அதிகம் வரும் எதாவது ஒருவிஷயத்தில் நம்மை பொறாமை பட வைத்து விடுவார்கள்.
எல்லா பெண்களும் எல்லாரிடமும் சகஜமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது மிக மிக அரிதாகவே சகஜமாக பழகும் பெண்களை உடனே அடையாளம் காண முடியும். மற்ற படி பேசினால் மட்டுமே தன் சில பேரை அடையாளம் காண முடியும்.
நாமே நமது நடைமுறை வாழ்வில் சொல்லி இருப்போம் "அட நீங்கள் இப்படி பழகுவீர்கள் என்று நினைத்து பார்க்கவில்லை" என்று அது போல் தான் என் தோழியிடமும் நான் உணர்ந்தேன் ..
அனால் இன்று வரை அவர் எல்லாரிடமும் சகஜமாகவே உள்ளார் ஆனால் என்னால் தான் "அவர்களை மற்றவர்களுக்கு விட்டு குடுக்க முடியவில்லை".
என் தோழியிடம் வந்த முதல் பதிலால் மிகவும் சந்தோசமாகவே இருந்தேன் திரும்ப மெயில் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தேன். இந்த முறை ரொம்பவே நாட்கள் எடுத்து கொண்டார். ஆனால் நான் விடுவேனா மறுபடியும் மெயில் அனுபின்னேன் பரீட்சை உள்ளது விரைவில் பதில் தருகிறேன் என்று அந்த தினமே பதில் அனுப்பினார்.
எப்பவும் போல அன்றும் என்மனதில் அலாரம் அடித்தது மெயில் திறந்தால் அவர்களின் மெயில் மறுபடியும் பதில் அனுபின்னேன் ஆனால் அந்த தினம் மட்டும் என்மனதில் அலாரம் ஏன் என்றால் உடனுக்குடன் பதில் தந்தார் . அனால் நானோ அலாரம் அடிக்கும் போது மட்டும் மெயிலை திறந்து பார்த்தேன்...
உடனே சொல்லிவிட்டேன் உங்களிடம் எனக்கு எதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று அவரும் அடுத்த நாள் என்னிடம் நாளை பேசலாம் என்று சொல்லிவிட்டார் நானும் அடுத்த நாள் எப்பொழுது மணி ஆகும் என்று காத்திருந்தேன்.
சொல்லியது போல வந்தார் வந்தது போல என்மனதிலும் எப்படி முழுமையாக வந்தார் என்பதை இனி வரும் பதிவுகள் சொல்லும் ,,,,காத்திருங்கள். பதிவுகளின் முடிவில் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறேன் அதுவரை காத்திருக்கவும்.
அருமை. வாக்கு கொடுத்தீடீங்க, ஆவலா காத்திட்டு இருக்கோம்.
ReplyDelete:) ..continue
ReplyDeleteஅருமை..நன்பன் சொல்லி தான் இங்க வந்தேன்.. உங்கள் தோழி எங்கள் மனதிலும் முழுவதுமாக நிறைவார் போல.
ReplyDeleteகாத்திருக்கோம் .....ஆவலாய்!!!
ReplyDelete