பெண்களை பற்றி சில கருத்துக்கள் எனக்கு உண்டு. இது யாருடைய மனதையும் புண்படுத்த நான் எழுத வில்லை இது முழுக்க முழுக்க என்னுடைய அனுபவத்தை மட்டுமே எழுதுகிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.
பெண்கள் மிகவும் மெல்லிய மனதுடையவர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் பார்த்தும் உள்ளேன்.சில பேர் மிகவும் நெருங்கி பழகுவார்கள் ஆனால் சந்தர்ப்பம் வரும் பொது நாம் நம்பி சொல்லிய விஷயங்களை சொல்லி விடுவார்கள்.
சில பேர் என்னவந்தாலும் எதையும் சொல்ல மாட்டார்கள்.சில பேர் மேலோட்டமாக மட்டுமே பழகுவார்கள் அவர்களுடைய எந்த விஷயத்தையும் யாரிடமும் சொல்ல மாட்டார்கள் .
சில பேர் சகஜமாக பழகுவார்கள் தனக்குரிய எந்த பொருளையும் விட்டு குடுக்க மாட்டார்கள் நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள் அனால் இவர்களிடம் கோபம் அதிகமாக இருக்கும் நான் இந்த வகைப்பெண்களைப் போன்றவள் தான்.புகழ்ச்சிக்காக சொல்லவில்லை எண்குணம் இப்படி தான்.
இது எந்த வகைகளிலும் பொருந்தாமல் தனக்கென தனி இடம் வைத்துள்ளவர் என் தோழி.கோபப்படமாட்டார்,தனக்கென்று எதையும் வைத்துக்கொண்டதாக இதுவரை நான் பார்த்ததில்லை சுயனலமற்றவர்...
இவரை நான் தோழியாக அடைவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. எங்கள் அறிமுகமே உதவுவதில் தொடங்கியது தான்.அது எப்படி என்று இனிவரும் பதிவுகளில் சொல்கிறேன்..
உங்கள் தோழியைப் பற்றியான உங்கள் வர்ணனைகள் ரசிக்கும் படி உள்ளது. இன்னும் பதிவு நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete